சிலேடை(பாகம் 2)
ஒளவையார் தனது தள்ளாடும் வயோதிகப் பருவத்தில் இருந்த பொது குறிப்பறிந்து திருவாலங்காடு அருகில் இருக்கும் பழயநூரை சேர்ந்த சாரி என்பவன் அவருக்கு கோல் கொடுத்து உதவினான் . அதற்கு கைம்மாறு செய்ய விரும்பிய அவர் ஒரு கறவை ஆடு வாங்கிப் பரிசாக கொடுக்க நினைத்தார் . அதனால் அப்பொழுது ஆட்சியில் இருந்த சேர மன்னனை சந்தித்து நடந்ததைக் கூறி " ஒரு ஆடு வேண்டும் " என்றார் .சேர மன்னனோ ஒரு தங்க ஆட்டையே அவருக்கு பரிசாக அளித்தான் . இதை பாராட்டி பாடிய ஒளவை "சேரா , உன்னாடு பொன்னாடு " என்று வாழ்த்தினார் .இது ஒரு சிலேடை . நேரடியாக அவர் " உன் ஆடு பொன் ஆடு " என்று கூறுவதாகவும் கொள்ளலாம் . அதோடு "உன் நாடு பொன் நாடு " என்று அவர் வாழ்த்தியதும் பொருந்தும்.
-------------------------------------------------------------------------------------------------
நம்மில் பல பேருக்கு நன்கு தெரிந்த ஒளவை மூதாட்டியின் ஒரு பாடல் .
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலரால் நோக்குண்டாம் மேனிநுடுங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
இப்பாடலுக்கு மேலெழுந்தவாரியான பொருள் :
" யானை முகத்தவனைத் தவறாமல் என்றும் வணங்கி வருபவர்களுக்கு நல்ல வாக்கு , நல்ல மனம் ,இலக்ஷ்மி தேவியின் நல்ல பார்வை ஆகிய இம்மூன்றும் கிட்டும் ."
இப்பாடலில் மறைந்துள்ள மற்றொரு பொருளையும் காண்போம் .நீண்ட நாள் வாழ்தற்க்குரிய அருமருந்தான காயகல்பம் செய்யும் முறையைப் பாட்டி கூறுகிறார்கள் .
1. துப்பார்த்திருமேணி - திரு அடைமொழி . துப்பு - குப்பை .மேனி .இச்செடி எங்கும் வளர்ந்திருக்கும் .
2. தும்பிக்கையான் பாதம் - அனைநெருஞ்சி
3. மாமலர் - தாமரை.
குப்பைமேனி இலை , ஆனைநெருஞ்சி இலை , ஓரிதழ்த் தாமரை இவற்றைச் சம அளவில் எடுத்து பனங்கற்கண்டு , பசுநெய் , தேன் ஆகிய மூன்றுடன் சேர்த்து செய்ய கிடைப்பதே காயகல்பம் . இந்த மருந்தை உண்டால் நல்ல வாக்கு வன்மை பெரும் .நல்ல மனம் உண்டு (உடலில் எந்த இடையூறும் வராது ) நல்ல நோக்கு - நல்ல பார்வை கிட்டும் , மேனி நுடங்காது - உடல் தொய்வு ஏற்படாது .எனவே இரண்டிற்கும் வழி காட்டிய ஒளவையை போற்றி வாழ்வோம் .
-------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீ சுவாமிநாத சுவாமியை வணிகச் செட்டியாராக பாவித்து , இரு பொருள்படும்படி பாடல் ஒன்றை இயற்றியுள்ளார் சொக்கநாதப் புலவர் . அது :
" வெங்காயம் சுக்கானால் , வேந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
எரகத்துச் செட்டியாரே "
இதற்கு , " அஜீரணத்தைப் போக்க ரசம் சாப்பிடு , குணம் அடையலாம் " என்றும் , " உடம்பு தளரும் போது நம் ஆன்மாவுக்கு வீடுபேற்றை தரவல்லது ஸ்ரீ ச்வாமினாதறது பேரருள் மட்டுமே " என்றும் இரு வேறு பொருள் கொள்ளலாம் .
[குறிப்பு]
வெங்காயம் -> வெம்மையான காயம்(உடல்)
சுக்கு -> சுக்கு போல் சிரியதாக
வெந்தயம் -> அயக்கந்த சிந்தூரம்
இச்சரக்கை ->இவ்வுடலை
சீரகத்தை -> சீரான மனத்தை
பெருங்காயம் -> பெரிய உடல்
ஏரகத்து செட்டியார் -> திருவேரகம்(சுவாமிமலை) முருகன் .
-------------------------------------------------------------------------------------------------
திருமணம் ஒன்றில் மணமக்களை சிவனும் திருமாலும் காக்க வேண்டும் என்று சிலேடையாக பாடியது .(காளமேகப் புலவர் பாடல் )
" சாரங்க பாணியர் அஞ்சக்கரத்தர் கஞ்சனைமுன்
ஓர்அங்கம் கொய்த உகிர்வாளர் - பார்எங்கும்
எத்திடுமை ஆகர் இனிதால் இவர்உம்மைக்
காத்திடுவர் எப்போதும் காண்" .
1. சாரங்க ->சார்+அங்க(சால்புடை அங்கத்தினர்) , சாரங்கம் எனும் வில் கொண்டவர்.
2.அஞ்சக்கரத்தர் ->ஐந்து அக்கரத்தை(அட்சரம்) உடையோர்(நமசிவாய), அம் (அழகான) சக்கரத்தைக் கொண்டவர்.
3.ஓரங்கம் கொய்த => ஓர் அங்கம் அளித்த (உமையொரு பாங்கன்), ஓரங்கம்(திருவரங்கம்)
மேற்காணும் ஒற்றுமைகளால் சிவனும் திருமாலும் இப்பாவில் ஒன்றாகின்றனர்.
[ ஓம் நம சிவாய , ஓம் நமோ நாராயணாய ]
Showing posts with label Language. Show all posts
Showing posts with label Language. Show all posts
Friday, April 11, 2008
Wednesday, March 19, 2008
சிலேடை
ஆர்குட்டில் சிலேடைப்பற்றிய ஒரு நல்ல இழையிலிருந்து சில துளிகள்.
தமிழில் பல சிறப்பான வெண்பா வகைகள் உள்ளன. இவற்றுள் இரட்டுற மொழிதல் மிகவும் அழகான சிந்தனையை தூண்டுவதாகவும் இருக்கும் ஒரு வகை .இரு பொருள்பட செய்யுள் இயற்றுவதே சிலேடை ஆகும் .
செங்கல்பட்டு பெருங்காயம்
பொருள் ஒன்று : செங்கல் பட்டு பெரும் காயம் .(அதாவது அடி படுவதை பற்றி பேசுகிறோம்).
பொருள் இரண்டு : செங்கல்பட்டில் இருந்து வரும் பெருங்காயம்.(சமையல் பொருள்).
அடுத்து ...தலை விதி வசம் மற்றும் அதன் வேற்றுமையான தலைவி திவசம் .
கவி காளமேகம் இதற்க்கு மிகவும் பெயர் பெற்றவர். அவரது பாடல்களை தெரிவிப்பதற்கு முன்பு அழகிய சொக்கநாதர் பாடல் ஒன்றைப் பார்போம் .
சக்கரத்தி னாலரவந் தாங்குதலி னோடுமுள்ளெட்
அக்கரத்தி னால்வேலை யார்வதினால் - மிக்கவன்பர்
முக்கியமாய்க் கைக்கொளலால் முத்துசா மித்துரையே
கைக்கடியா ரந்திருமால் காண்.
பொருள் :
இது திருமாலுக்கும் கைக்கடிகாரத்துக்குமான சிலேடை .
கடிகாரம்:
1. சக்கர வடிவை உடையது .
2. ஒருவித ஓசையைக் கொண்டுள்ளது .
3. முள் தொடுகின்ற எண்ணையும் எழுத்துக்களையும் உடையது .
4. சிறந்த வேலைப்பாடு உடையது .
5. விரும்பும் அன்பர் கைக்கு அழகூட்டுவது .
திருமால் :
1. சக்கராயுதத்தை உடையவர் .
2. ஆதிசேடனாகிய பாம்பணைமேல் பள்ளிகொள்பவர்.
3. ஓம் நமோ நாராயணாய என்ற அட்டாக்கர மந்திரத்தால் வணங்கப்படுபவர் .
4. திருப்பாற்கடலில் எழுந்தருளி உள்ளவர் .
5. மெய் அன்பர்களால் கைகூப்பித் தொழும் தன்மையர் .
ஆலமர்க் கடவுள்
பொருள் 1: கல்லால மரத்துக்கு அடியில் இருந்து தனது மௌனத்தாலேயே அனைத்தையும் கற்பிக்கும் தென்முகக் கடவுள் .(தக்ஷிணாமூர்த்தி )
பொருள் 2 : ஊழிக் காலத்தே உலகினைத் தன்னுள் அடக்கி ஆலிலைத் தளிரிலே படுத்திருக்கும் குழந்தைக் கண்ணன் .
அடிநந்தி சேர்தலா லாகம் வெளுத்துத்
கொடியுமொரு பக்கத்திற் கொண்டு -வடிவுடைய
மாசுணத்தை பூண்டு வளைத் தழும்பு பெற்றதனால்
பூசணிக்காயும் ஈசனெனப் போற்று!
பூசணிக்காய்:-
அடி நந்தி சேர்தலால் - அடிப்பாகத்தே பெரிய காம்பு சேர்ந்திருக்க விளங்குவதால்
ஆகம் வெளுத்துத் - உடல் வெளுத்து
கொடியும் ஒரு பக்கத்திற் கொண்டு - ஒரு பக்கத்தே கொடியினைக் கொண்டு
வடிவுடைய மாசுணத்தை பூண்டு - அழகான வெண்நிறத்தை மேல் கொண்டு
வளைத் தழும்பு பெற்றதனால் - வளைவான தழும்புகளை மேல் கொண்டதனால்
பூசணிக்காயும் ஈசனெனப் போற்று! - பூசணிக்காயையும் ஈசனாகக் கருதிப் போற்றுவாயாக!
சிவபெருமான்:
அடிநந்தி சேர்தலால் - திருவடியிலே நந்திப்பெருமான் சேர்ந்திருத்தலாலும்
ஆகம் வெளுத்துத் - திருநீறணிந்து உடல் வெண்மையையாய் இருப்பதாலும்
வடிவுடைய கொடியுமொரு பக்கத்திற் கொண்டு - ஒரு பக்கத்தில் பூங்கொடியாய உமையைக் கொண்டு
மாசுணத்தை பூண்டு - சிறந்த பாம்பு ஆபரணத்தைக் கொண்டுவளைத்
தழும்பு பெற்றதனால் -தன் திருமேனியினிடத்தே அம்மை தழுவியதால் ஏற்பட்ட வளையல் தழும்புகளைக் கொண்டவர் சிவபெருமான்.
ஆர்குட்டில் சிலேடைப்பற்றிய ஒரு நல்ல இழையிலிருந்து சில துளிகள்.
தமிழில் பல சிறப்பான வெண்பா வகைகள் உள்ளன. இவற்றுள் இரட்டுற மொழிதல் மிகவும் அழகான சிந்தனையை தூண்டுவதாகவும் இருக்கும் ஒரு வகை .இரு பொருள்பட செய்யுள் இயற்றுவதே சிலேடை ஆகும் .
செங்கல்பட்டு பெருங்காயம்
பொருள் ஒன்று : செங்கல் பட்டு பெரும் காயம் .(அதாவது அடி படுவதை பற்றி பேசுகிறோம்).
பொருள் இரண்டு : செங்கல்பட்டில் இருந்து வரும் பெருங்காயம்.(சமையல் பொருள்).
அடுத்து ...தலை விதி வசம் மற்றும் அதன் வேற்றுமையான தலைவி திவசம் .
கவி காளமேகம் இதற்க்கு மிகவும் பெயர் பெற்றவர். அவரது பாடல்களை தெரிவிப்பதற்கு முன்பு அழகிய சொக்கநாதர் பாடல் ஒன்றைப் பார்போம் .
சக்கரத்தி னாலரவந் தாங்குதலி னோடுமுள்ளெட்
அக்கரத்தி னால்வேலை யார்வதினால் - மிக்கவன்பர்
முக்கியமாய்க் கைக்கொளலால் முத்துசா மித்துரையே
கைக்கடியா ரந்திருமால் காண்.
பொருள் :
இது திருமாலுக்கும் கைக்கடிகாரத்துக்குமான சிலேடை .
கடிகாரம்:
1. சக்கர வடிவை உடையது .
2. ஒருவித ஓசையைக் கொண்டுள்ளது .
3. முள் தொடுகின்ற எண்ணையும் எழுத்துக்களையும் உடையது .
4. சிறந்த வேலைப்பாடு உடையது .
5. விரும்பும் அன்பர் கைக்கு அழகூட்டுவது .
திருமால் :
1. சக்கராயுதத்தை உடையவர் .
2. ஆதிசேடனாகிய பாம்பணைமேல் பள்ளிகொள்பவர்.
3. ஓம் நமோ நாராயணாய என்ற அட்டாக்கர மந்திரத்தால் வணங்கப்படுபவர் .
4. திருப்பாற்கடலில் எழுந்தருளி உள்ளவர் .
5. மெய் அன்பர்களால் கைகூப்பித் தொழும் தன்மையர் .
ஆலமர்க் கடவுள்
பொருள் 1: கல்லால மரத்துக்கு அடியில் இருந்து தனது மௌனத்தாலேயே அனைத்தையும் கற்பிக்கும் தென்முகக் கடவுள் .(தக்ஷிணாமூர்த்தி )
பொருள் 2 : ஊழிக் காலத்தே உலகினைத் தன்னுள் அடக்கி ஆலிலைத் தளிரிலே படுத்திருக்கும் குழந்தைக் கண்ணன் .
அடிநந்தி சேர்தலா லாகம் வெளுத்துத்
கொடியுமொரு பக்கத்திற் கொண்டு -வடிவுடைய
மாசுணத்தை பூண்டு வளைத் தழும்பு பெற்றதனால்
பூசணிக்காயும் ஈசனெனப் போற்று!
பூசணிக்காய்:-
அடி நந்தி சேர்தலால் - அடிப்பாகத்தே பெரிய காம்பு சேர்ந்திருக்க விளங்குவதால்
ஆகம் வெளுத்துத் - உடல் வெளுத்து
கொடியும் ஒரு பக்கத்திற் கொண்டு - ஒரு பக்கத்தே கொடியினைக் கொண்டு
வடிவுடைய மாசுணத்தை பூண்டு - அழகான வெண்நிறத்தை மேல் கொண்டு
வளைத் தழும்பு பெற்றதனால் - வளைவான தழும்புகளை மேல் கொண்டதனால்
பூசணிக்காயும் ஈசனெனப் போற்று! - பூசணிக்காயையும் ஈசனாகக் கருதிப் போற்றுவாயாக!
சிவபெருமான்:
அடிநந்தி சேர்தலால் - திருவடியிலே நந்திப்பெருமான் சேர்ந்திருத்தலாலும்
ஆகம் வெளுத்துத் - திருநீறணிந்து உடல் வெண்மையையாய் இருப்பதாலும்
வடிவுடைய கொடியுமொரு பக்கத்திற் கொண்டு - ஒரு பக்கத்தில் பூங்கொடியாய உமையைக் கொண்டு
மாசுணத்தை பூண்டு - சிறந்த பாம்பு ஆபரணத்தைக் கொண்டுவளைத்
தழும்பு பெற்றதனால் -தன் திருமேனியினிடத்தே அம்மை தழுவியதால் ஏற்பட்ட வளையல் தழும்புகளைக் கொண்டவர் சிவபெருமான்.
Subscribe to:
Posts (Atom)